ஞாயிறு, 23 ஜனவரி, 2011

காய்கறி வாங்கப் போன மச்சான்…........ (நகைச்சுவைக் கவிதை)




காய்கறி வாங்கக் கடைக்குப் போன மச்சான்
கதிகலங்கிப் போயித் திகைச்சு நின்னான்

காய்கறி வாங்க அவன் நெனச்சதில்லே
கனா கூட இதுவரைக்கும்  கண்டதில்லே

ஆயாசம் அடிக்கடி வருதுன்னு
நோயாளியாப் போனான் வைத்தியரத் தேடி .

சூப்பு வச்சு குடிச்சா சரியாப் போகுமின்னு
சொல்லிப் போட்டாரய்யா வைத்தியரய்யா.

சூப்புக்குக் காய் வாங்கப் போன மச்சான்
துவண்டு போனான் வெலையக் கேட்டு.

வெங்காயம் வெல மட்டும் நூறு ரூவாயாம்
வெல சொல்ல பீசு மட்டும் பத்து ரூவாயாம்

சொத்தையில்லாத  கத்தரிக்கா வேணுமின்னா
சொத்தையெல்லாம் வித்துப்புட்டுப் போகணுமாம்.

கம்மலை  அடகு வச்சு மகராசிங்க
காரட்டு  வாங்கிக்கிட்டுப் போனாங்க

மூக்குத்திய வித்துட்டு வந்த புள்ளத்தாச்சிக்கு
முள்ளங்கிப் பத்த மட்டுந்தான் அகப்பட்டுச்சு.

பச்சைப் பட்டாணி பாக்கட்டுக்குக் காவலா
பக்கத்துலயே நிக்கிறான் போலீசுக்காரன்

எடை போட்டுக் குடுத்த பழக்கமெல்லாம்
எப்பவோ மலையேறிப் போயிருச்சாம்

ஒத்த தக்காளியோட வெல மட்டும்
ஒம்போது ரூவாய்னு சொன்னாக.

பூண்டு வெல கேட்டுப் போனவுக
பூதம் அடிச்சாப்ல வந்தாக

எல்லா வெலயையும் கேட்டுப்புட்டு
என்னமோ பண்ணுதுன்னு சொன்ன மச்சான்

மண்டை கிறுகிறுத்து மயங்கிப் போயி
மந்தையிலே விழுந்தான் குப்புறடிச்சு.

தண்ணி தெளிச்சு எழுப்பி விட்ட ஒரு பெரிசு
தன்மையா சொல்லிச்சு அவன் காதுக்குள்ள

"பலகீனம் மட்டும்தாம்பா ஒன்னோட வியாதி
பயப்படாதே , காய் கறி துன்னு, சரியாப் போகும்."

திரும்பவும் மயக்கம் போட்டு விழுந்தான் மச்சான்
தெளியறதுக்கு யாராச்சும் வழி சொல்லுங்கோ .


8 கருத்துகள்:

Unknown சொன்னது…

மயங்கிப் போன மச்சான் சூப்பரு.

மினரல் வாட்டர் தெளிச்சு அவர எழுப்புங்க . லிட்டர் நாற்பது ரூபாதான்.

இது எப்படி இருக்கு ?

Unknown சொன்னது…

By looking a vegetables price in the photo, really a challenge for middle class people.

காய்கறி வாங்கக் கடைக்குப் போன மச்சான்
கதிகலங்கிப் போயித் திகைச்சு நின்னான்

Poetry slang is excellent

நிஷாந்தன் சொன்னது…

அருமை நண்பரே !

சூப் பற்றிய கவிதை `சூப்'பர் என்ற உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ! ( என்ன சொல்றீங்க ? அப்படியெல்லாம் நான் சொல்லவேயில்லையேன்னா ? பரவாயில்லை விடுங்க, நீங்க மனசுல நெனச்சத சொன்னதா நான் எழுதிட்டேன், அம்புட்டுதேன்.

உங்க நண்பர்கள் எல்லாருக்கும் நம்ம வலைப்பூ பத்தி நல்லா சொல்லுங்க பாஸ். அப்பதானே நான் மஸ்கட் வரும்போது `வலைப்பூக்களின் சக்ரவர்த்தியே வருக `ன்னு நிறையப் பேர் பேனர் வைப்பாங்க.

நம்பிக்கைதான் நண்பா வாழ்க்கை .

Chitra சொன்னது…

Non-veg. சாப்பிட ஆரம்பிக்க சொல்றாங்களோ? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...
கவுஜ நல்லா எழுதி இருக்கீகளே!

Chitra சொன்னது…

Followers Widget இணைக்கவில்லையா?

நிஷாந்தன் சொன்னது…

சித்ரா மேடத்தின் பாராட்டுக்கு நன்றி !

Followers widget விரைவில் இணைக்க வேண்டும். சல்மான் கான், ஷாருக், மல்லிகா ஷெராவத், ப்ரீத்தி ஜிந்தாவெல்லாம் பின்னூட்டம் அனுப்பப் போறதா சொன்னாக. அப்ப செய்யலாமேன்னு பார்த்தேன். பரவாயில்ல, நாம தொடங்க வேண்டியதுதான், பிறகு அவங்க வந்து ஜாயிண் பண்ணிக்கட்டும்.

sundar சொன்னது…

Hai uncle,
perfect lines for Indian Inflation.
by, kannikakans

நிஷாந்தன் சொன்னது…

அன்புக்கு நன்றி .

தொடர்ந்து உங்கள் மேலான கருத்துரைகளை வழங்கவும்.

கருத்துரையிடுக