கோடைக் காலம் தொடங்கி விட்டது.
இவ்வாண்டு வெயிலின் உக்கிரம் 45 டிகிரியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் வெய்யிலின் காரணமாக குடிக்க நீரின்றி ஏராளமான பறவைகள் மடிந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. பறவைகளின் தாகம் தணித்து அவைகளின் உயிர் காக்க நமது பங்களிப்பும் அவசியம்தானே ?
நம் இல்லங்களின் முற்றங்களிலும், அடுக்ககக் குடியிருப்பின் பால்கனியிலும் சிறு பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி வைப்போம். சில தானிய மணிகளையும் இறைத்து வைக்கலாம்.
தாகத்தோடு வரும் பறவைகள் உணவருந்தி, நீர் குடித்து மகிழ்வதுடன் நம்மையும் வாழ்த்தி விட்டு சிறகடிக்கும்.
அலைபேசி கோபுரங்களின் வருகையால் சிட்டுக்குருவி என்ற அழகிய பறவையினத்தையே நாம் அழித்து விட்டோம்.
மீதமிருக்கும் பறவைகளையும் தாகத்தால் சாக விடக் கூடாதல்லவா ?