ஞாயிறு, 31 அக்டோபர், 2010

வணக்கம் நண்பரே !

கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் கொண்டிருந்த ஆழமான நட்பு இன்று ஆயிரம் ஆயிரமாய் உலகமெங்கும் !

எல்லாம் வலைப் பூக்கள் செய்த மாயங்கள்தாம்.

எண்ணங்களின் சிதறல்கள் வண்ணங்களாக வலைப் பின்னல்களில் வலம் வரும் பாங்கின் அழகே அழகு .

முழு நிலாவின் மெலிதான வெளிச்சத்தில் - கூட்டாஞ் சோறின் கதம்ப சுவையோடு - குதூகல நண்பர்களின் உரிமையான உரையாடல்களோடு , வாருங்கள் வலம் வருவோம் - நிலா வெளிச்சத்தில் !

நமது இடுகைகள் நம்மைப் பிரசவித்த தேசத்திற்கும், நாவசைத்துப் பேச வைத்த நமது மொழிக்கும் அணுவின் அளவென நன்மை செய்யுமேயானால் .... உள்ளபடியே சொல்லுகின்றேன் ,  நம் உள்ளமெல்லாம் பூக்கும் உவகைப் பூக்கள் !