வியாழன், 29 மார்ச், 2012

பறவைகளைப் பாதுகாப்போம் ...!


கோடைக் காலம் தொடங்கி விட்டது.
இவ்வாண்டு வெயிலின் உக்கிரம் 45 டிகிரியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 கடும் வெய்யிலின் காரணமாக குடிக்க நீரின்றி ஏராளமான பறவைகள் மடிந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. பறவைகளின் தாகம் தணித்து அவைகளின் உயிர் காக்க நமது பங்களிப்பும் அவசியம்தானே ?


நம் இல்லங்களின் முற்றங்களிலும், அடுக்ககக் குடியிருப்பின் பால்கனியிலும் சிறு பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி வைப்போம். சில தானிய மணிகளையும் இறைத்து வைக்கலாம். 
தாகத்தோடு வரும் பறவைகள் உணவருந்தி, நீர் குடித்து மகிழ்வதுடன் நம்மையும் வாழ்த்தி விட்டு சிறகடிக்கும். 

அலைபேசி கோபுரங்களின் வருகையால் சிட்டுக்குருவி என்ற அழகிய பறவையினத்தையே நாம் அழித்து விட்டோம்.

 மீதமிருக்கும் பறவைகளையும் தாகத்தால் சாக விடக் கூடாதல்லவா ?





சனி, 17 மார்ச், 2012

ஒரு குட்டியின் பகிர்தல்




என்னேரமும் மின் வெட்டால்
ஏதுமில்லை பொழுது போக்கு

எல்லோருமே பிசியானதால்
எங்கோ போனது அன்பின் பகிர்வு

செவிமடுக்க எவருக்கும் நேரமில்லை
செப்புவதற்கு எனக்கு மனமுமில்லை

குட்டித் தூக்கம் இல்லை இது
குட்டியின் துக்கம், புரிந்து கொள்வீர் !

திங்கள், 20 பிப்ரவரி, 2012

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி



*நாவல் / நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 
2011ஆம் ஆண்டு
 ( 2011 ஜனவரி முதல் டிசம்பர் வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.

*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும்.

*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.

*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 31-03-2012

*அனுப்ப வேண்டிய முகவரி

தமிழ்மணவாளன்
18, பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051

செந்தமிழ் அறக்கட்டளை
மணப்பாறை